சென்னை:

சசிகலாவுக்கு ஆதரவாக பேசி வந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகன், தீபக், தற்போது ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக பேச ஆரம்பித்துள்ளார்.

இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த  தீபக், “போயஸ் கார்டன் இல்லத்திற்கு நானும், தீபாவும்தான் உரிமையாளர்கள். ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை, கடன் வாங்கிதான் செலுத்துவோம். ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், “எனது குடும்பமோ, சசிகலாவின் குடும்பமோ அதிமுகவில் பதவிக்கு வரக்கூடாது. கட்சியை ஓ.பன்னீர்செல்வமே தலைமையேற்று நடத்தட்டும். டி.டி.வி தினகரனுக்கு கட்சியை வழி நடத்த எந்த தகுதியும் இல்லை!” என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.