சென்னை

ன் மீதான புகார் குறித்து பேச விளக்கம் அளிக்காததால் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக தினகரன் கூறி உள்ளார்.

சமீபத்தில் ஆர் கே நகர் தொகுதியில் இருந்து சுயேச்சையாக எம் எல் ஏ ஆனவர் தினகரன்.   இன்று அவர் தனது கன்னிப்பேச்சை பதிவு செய்தார்.    எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதல்வரும் அமைச்சர்களும் பதில் அளித்தனர்.   அந்த சமயத்தில் டிடிவி தினகரன் முதல் முறையாக வெளிநடபு செய்துள்ளார்.

செய்தியாளர்களிடம் தினகரன்,. “அவையில் என் மீது திமுகவுடன் கூட்டணி வைத்ததாக குற்றம் சாட்டினார்கள்.  நான் அதற்கு பதிலளிக்க அனுமதி மறுத்தனர்.  அதே போல அமைச்சர் தங்கமணி 18 உறுப்பினர்கள் தகுதி நீக்கம் பற்றி பேசியதற்கு பதில் சொல்ல அனுமதி கேட்ட போதும் எனக்கு அனுமதி மறுக்கப் பட்டது.   அதனால் தான் நான் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளேன்”  என கூறி உள்ளார்.