கொல்கத்தா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அனியில் ஐபிஎல் 2018க்கான அணித்தலைவராக தினேஷ் கார்த்திக் மற்றும் துணைத் தலைவராக ராபின் உத்தப்பா ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

 ராபின் உத்தப்பா

ஐபிஎல் 2018க்கான அணிகளின் வீரர்கள் ஏலம் முடிவடைந்ததை ஒட்டி தற்போது ஒவ்வொரு அணியும் தங்களின் தலைவரை தேர்ந்தெடுத்து அறிவிக்கத் தொடங்கி உள்ளன.   கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மிக நாட்களாக விளையாடி வருபவர் ராபின் உத்தப்பா   ஆவார்.   மேலும் அந்த அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஆவார்.  தினேஷ் கார்த்திக்கை ரு.7.4 கோடிக்கு இந்த அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்த அணியின் அதிகார பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தினேஷ் கார்த்திக் தலைவராகவும்,  ராபின் உத்தப்பா துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செய்தியை வெளியாகி உள்ளது.   இதற்கு தினேஷ் கார்த்திக், “கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதில் பெருமை அடைகிறேன்.  எனக்கு அளிக்கப்பட்ட பணியை திறம்பட நிறைவேற்றி அணிக்கும், அணியின் ரசிகர்களுக்கும் பெருமை தேடித் தருவேன்”  என தெரிவித்துள்ளார்.