டில்லி:

ந்தியாவின் டில்லி மற்றும் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரங்கள் இடையே நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் துவங்கியுள்ளது.

சுமார் 238 பேர் பயணம் செய்யும் வசதி கொண்ட போயிங் ரக விமானம், இந்த இரு நகரங்களிடையே பறக்கிறது. வாஷிங்டன் வரை செல்லும் விமான சேவை அமெரிக்க தூதரகத்தின் இயக்குனர் மேரிகே லாஸ் கார்ல்சன், ஏர் இந்தியா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அஸ்வனி லோகானி ஆகியோர் முன்னிலையில், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துவங்கியது.

டில்லி – வாஷிங்டன் இடையே வாரம் மூன்று முறை இந்த விமானம் இயக்கப்படும். தவிர நியூயார்க், நேவார்க், சிக்காகோ மற்றும் ஆகிய நகரங்களுக்கும் தினசரி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சான் பிரான்சிஸ்கோ நகருக்கு வாரம் 6 முறை விமானம் இயக்கப்படுகிறது.

மேலும் அமெரிக்காவின் மற்ற நகரங்களான லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஹூஸ்டனிற்கு விமான சேவையை தொடங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக ஏர் இந்தியா இயக்குனர் தெரிவித்துள்ளார்.