புதுடெல்லி:

நிதியாண்டு முடிய குறைவான காலம் இருப்பதால், மீதமுள்ள 15 சதவீத வருமான வரியை அதிரடி நடவடிக்கைகள் மூலம் வசூலிக்குமாறு, வருமான வரித்துறையினருக்கு நேரடி வரிவிதிப்பு மத்திய வாரியம் உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக, வருமான வரித்துறையின் அனைத்து மண்டல தலைவர்களுக்கு கடந்த 26-ம் தேதி நேரடி வரிவிதிப்பு மத்திய வாரிய உறுப்பினர் நீனா குமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதன்விவரம்:

வருமானவரித்துறை 12 லட்சம் கோடி வருமான வரி இலக்காக பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 10,21,251 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது. அதாவது 85.1% மட்டுமே வசூலாகியுள்ளது.

இது மிகவும் அபாயகரமானது. இது குறித்து உடனே கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நிலுவை வரி மற்றும் தற்போதைய வரியை வசூலித்து இலக்கை எட்ட வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.