உடல் நலக் குறைவால் ஒரு வார காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குநர் மகேந்திரன் தனது இல்லத்தில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 79.

முள்ளும் மலரும், உதிரி பூக்கள், ஜானி போன்ற உணர்வுப் பூர்வமான படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடத்தவர் நடிகர் மகேந்திரன்.

அவரின் மறைவு குறித்து இயக்குநர் அறிவழகன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

எவ்வளவு படங்கள் என்பது முக்கியமில்லை. எப்படியான தரமான படங்கள் என்பதே முக்கியம். சரியாக வரையறுக்கப்பட்ட தனது கதாபாத்திரங்கள் மூலம் எதார்த்தத்தைக் கொண்டு வந்ததற்காக எப்போதும் இவர் பேசப்படுவார். உங்களுக்கு எனது மரியாதை மற்றும் வணக்கங்கள். ஜான் ரோஷன் மற்றும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.