‘தமிழ்ப் படம் 2’ படத்தில் ‘தளபதி’ படத்தின் காட்சியை நையாண்டி செய்து எடுக்கப்பட்ட ஒரு காட்சியில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது அடியாள் ரமணா என்பவரைத் தேடி வருவார் மம்மூட்டியைப் போல இருக்கும் கதாபாத்திரம்.

ஆனால் அவர் முதலில் அணுகும் நபர், விஜயகாந்த் நடித்த ரமணா படத்தில் வருவதைப் போல வசனம் பேசுவார். இதற்கு உடனிருப்பவர், இது வேற ரமணா என்பார்.

இந்த காட்சி சமீபத்தில் அரசியல் ரீதியான ஒரு கிண்டலுக்காக இந்த மீமை ஒருவர் பயன்படுத்தியுள்ளார்.

இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ‘தமிழ்ப் படம்’ இயக்குநர் அமுதன், தயாரிப்பாளர் சஷிகாந்தை குறிப்பிட்டு, “இந்த template-க்கு ராயல்டி வாங்கிருந்தாலே நீ இந்நேரத்துக்கு கார் வாங்கிருக்கலாம்” என்று கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார்.

அமுதனின் இந்த ட்வீட்டை பலரும் லைக் செய்து, ரீட்வீட் செய்து வருகின்றனர்.