மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரின்  சொத்துக்கள் ஏலத்துக்கு வந்திருக்கிறது.

தமிழகத்தில் பிரபல இயக்குநராக விளங்கியவர் கே.பாலச்சந்தர். ரஜினி, கமல் உள்ளிட்டோரின் குருவாக மதிக்கப்படுபவர். திரைத்துறைக்குப் பிறகு தொலைக்காட்சித் தொடர்களை இயக்கி வந்தார். திரைப்படங்களிலும் நடித்தார். சொந்தமாக பட நிறுவனமும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனமும் நடத்திவந்தார்.

இந்த நிலையில் கடந்த 2014ம் ஆண்டு மறைந்தார்.

ஏல அறிவிப்பு

இந்த நிலையில் சென்னை அபிராமபுரத்தில் உள்ள  அவருக்குச்  சொந்தமான சொத்துக்கள் ஏலத்துக்கு வந்துள்ளன.  யு.சி.ஓ.  UCO வங்கியில் வங்கியில் வாங்கிய ஒரு கோடியே 36 லட்ச ரூபாய் கடனை குறித்த காலத்தில் திருப்பிச் செலுத்தாததால்  ஏலத்துக்கு வந்துள்ளது.