தெலுங்கு சினிமாவில் பிரபலமான இயக்குனர் கிரிஷ். தெலுங்கில் ராணா, நயன்தாரா நடித்த ‘கிரிஷ்ணம் வந்தே ஜகத்குரம்’, மறைந்த தெலுங்கு நடிகர் என்.டி.ராமராவ் வாழ்க்கை கதையான ‘என்.டி.ஆர் கதாநாயகுடு’, இந்தியில் கங்கனா ரணாவத் நடித்த ‘மணிகர்னிகா’ உள்ளிட்ட படங்களையும் இயக்கி உள்ளார்.

அடுத்ததாக நடிகர் பவன் கல்யாண் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்க தயாராகி வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்க இருந்த நிலையில், படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது இயக்குனர் கிரிஷுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் படப்பிடிப்பு உடனடியாக ரத்து செய்யப்பட்டது. தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைப் பெற்று வருகிறார் கிரிஷ்.

இவர் தமிழில் சிம்பு, அனுஷ்கா நடிப்பில் வெளியான ‘வானம்’ படத்தை இயக்கி உள்ளார்.