லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி விவசாயியாக நடித்த பூமி படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக கடந்த 14ம் தேதி ஓடிடியில் வெளியானது. படத்தை பார்த்த பலரும் குறை சொல்லியுள்ளனர்.

பூமி பற்றி ட்விட்டரில் நடந்த விவாதத்தை பார்த்த லக்ஷ்மண் கமெண்ட் போட்டுள்ளார். அந்த ட்வீட்டில் லக்ஷ்மண் கூறியிருப்பதாவது,

சார், நான் நம்ம எல்லோரும், ஃபியூச்சர் ஜெனரனேஷன் நல்லா இருக்கணும்னு நினைச்சேன். உங்களுக்காக தான் எடுத்தேன் ப்ரோ. ரோமியோ ஜூலியட் எடுத்த எனக்கு கமர்ஷியல் தெரியாதா? நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் ப்ரோ. நீங்கள் சூப்பர் ப்ரோ. நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள், நான் தோத்துட்டேன் என தெரிவித்துள்ளார்.

லக்ஷ்மணின் ட்வீட்டை பார்த்த சிலர் அவரை பாராட்டியுள்ளனர். விவசாயம் பத்தி பேசினால் இப்படித் தான் கிண்டல் செய்வார்கள், பசித்தால் தான் அதன் அருமை தெரியும் என்று கூறியுள்ளனர். சிலரோ லக்ஷ்மணை கலாய்த்துள்ளனர்.