35 ஆண்டுகளாக ஒரு இயக்குனர் இயங்கி வருகிறார் என்றால் அது மணிரத்தினம் தான் என்பதை சொல்வதற்கு யோசிக்க வேண்டாம் என கூறுவார்கள்.

கௌதம் வாசுதேவ் மேனன், ஏஆர் முருகதாஸ், செல்வராகவன் முதல் கார்த்திக் சுப்பாராஜ், கார்த்திக் நரேன் வரை அனைவரின் ரோல் மாடலாகவும் இருந்து வருகிறார். இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் இவர்.

மணிரத்னம். அவர் அடுத்து பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து பொன்னியின் செல்வன் கதையை மிக பிரமாண்டமாக படமாக்கவுள்ளார். அதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் மணிரத்னம் நெஞ்சுவலி காரணமாக திடீரென சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.