கொரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுக்க மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை.

திரையுலகினரும் உதவ ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்திருந்தார் . இதனை தொடர்ந்து பெரும்பாலானோர் உதவி புரிந்து வருகின்றனர் .

கடந்த ஏப்ரல் 8-ம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஆர்.கே.செல்வமணி, 2 கோடியே 45 லட்சம் ரூபாய் நிதி உதவி வந்து உள்ளது. அதுமட்டும் இல்லாமல் 2400 அரிசி மூட்டைகள் நன்கொடையாக வந்துள்ளன.

இன்னும் 9,000 தொழிலாளர்களுக்கு உதவிகள் தேவைப்படுகின்றன. எனவே உதவி செய்யுங்கள் என்று கூறி இருந்தார் செல்வமணி .

இதையடுத்து ஒருசில நடிகர்கள் உதவிக்கரம் நீட்டினர். அந்த வரிசையில் தற்போது இயக்குநர் பாண்டிராஜ் பெஃப்சி தொழிலாளர்களுக்கு ரூ.2 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.