ஆர்.ஜே.விக்னேஷ், அரவிந்த் உள்ளிட்ட பல இளைஞர்கள் இணைந்து தொடங்கிய யூடியூப் சேனல் ‘ப்ளாக் ஷீப்’.

புட் சட்னி புகழ் ராஜ்மோகன் இயக்கத்தில், தமிழ் திரையுலகில் பிரபல விநியோகஸ்தரான ராக்போர்ட் நிறுவனம் வழங்க, ப்ளாக் ஷீப் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கப் படம் ஒன்று தயாராகிறது.

இதன் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று (மார்ச் 11) முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன், ரியோ கலந்து கொண்டார்கள். சிவகார்த்திகேயன் க்ளாப் அடித்து இந்தப் படத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்த திரைப்படம் தற்கால பள்ளி மாணவர்களின் வாழ்க்கை, தேவை, ரசனை, மகிழ்ச்சி, கொண்டாட்டம், காதல், நட்பு மற்றும் இன்றைய சூழலில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் பதிவு செய்ய இருக்கிறார்கள். ஒட்டு மொத்த ப்ளாக் ஷீப் நட்சத்திரங்களும் நடிக்க,ப்ளாக் ஷீப் அயாசும், மைக் செட் ஸ்ரீராமும் நாயகர்களாக நடிக்கிறார்கள். இத்திரைப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது.