மூன்று மாதங்களாக எந்த படப்பிடிப்பும் நடத்த முடியாத சூழலில் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது கேரள அரசு.

இதையடுத்து மலையாள இயக்குநர் கலிட் ரஹ்மானின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது.

இந்த படத்தில் ஷைன் டாம் மற்றும் ரஜிஷா விஜயன் முதன்மை வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஜிம்ஸி கலிட் ஒளிப்பதிவு செய்து வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.