ஜீத்து ஜோசப் இயக்கிய படம் திரிஷ்யம். மலையாளத்தில் உருவான இப்படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடித்தார். அதேபடத்தை பாபநாசம் பெயரில் கமல்ஹாசன் நடிக்க ஜீத்து ஜோசப்பே தமிழிலும் இயக்கினார்.


இந்தியில் அஜய் தேவ்கன் நடிக்க ‘த்ரிஷ்யம்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப் பட்டபோது அப்படத்தை நிஷிகாந்த் காமத் இயக்கினார். அதுவும் பெரிய வெற்றி அடைந்தது. இந்தியில் மேலும் பல படங்களை இயக்கியிருக்கிறார் நிஷிகாந்த். அவர் சில தினங்களுக்கு முன் கல்லீரல் பாதிப்பு நோயால் ஆபத்தான நிலையில் ஐதராபாத்தில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் குணம் அடைய வேண்டி பலரும் பிரார்த் திப்பதாக மெசெஜ் வெளியிட்டனர். இந் நிலையில் இன்று அவரைப்பற்றி வதந்தி பரவியது. இதையடுத்து பிரபலங்கள் பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்து மெசேஜ் பகிர்ந்தனர். பின்னர் அது வதந்தி என்று தெரிந்தது. ஆனாலும் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் காலை முதல் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். ஆனாலும் சிகிச்சை பலனில்லாமல் மாலையில் மரணம் அடைந்தார்.அவருக்கு வயது 50.

நடிகர் ரிதேஷ்முக் உள்ளிட்ட பல நடிகர்கள் இயக்குனர் நிஷிகாந்த் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.