திருவனந்தபுரம்: தமிழகம், கேரளா இடையேயான நதிநீர் பங்கீடு குறித்த 2ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடக்கிறது.

தமிழகம், கேரளா இடையேயான நதி நீர் பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசகன் தலைமையில் ஒரு குழுவும், கேரளா சார்பில் நீர்வள ஆதார துறை செயலாளர் தலைமையில் மற்றொரு குழுவும் அமைக்கப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற இக்குழுவின் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தற்பொழுது 2ம் கட்டமாக நாளை பேச்சுவார்த்தை நடக்கிறது.

கேரளாவில் நடக்கும் இந்த பேச்சுவார்த்தையில் தமிழக குழு பங்கேற்கிறது.  நாளைய பேச்சுவார்த்தையில் ஆனைமலையாறு நல்லாறு அணைத் திட்டம், பாண்டியாறு புன்னம்புழா திட்ட நீர் பங்கீடு, சிறுவாணி அணை பிரச்னை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.