டில்லி:

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து டில்லி துணை முதல்வர் சிசோடியா கடிதம் ஒன்றை மக்களுக்கு எழுதியுள்ளார்.

அதில்,‘‘ எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் என்பது பாஜக.வின் மோசமான அரசியல். காவி கட்சிக்கு சரியான பதிலடியை மக்கள் கொடுக்க வேண்டும் 20 தொகுதிகளுக்கு பாஜக இடைத்தேர்தலை திணித்துள்ளது.

அடுத்த 2 ஆண்டுகளுக்கு வளர்ச்சி திட்டங்களை முடக்குவதற்கான இடையூறை பாஜக திறன்பட செய்து வருகிறது. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் அரசியலமைப்புக்கு விரோதமானது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.