சென்னை

மிழகத்தில் மாவட்டவாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 16277 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதில் 111 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 8324 பேருக்குக் குணமாகி தற்போது 7839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் 10576 பேர் பாதிக்கப்பாட்டு 78 பேர் மரணம் அடைந்து, 4844 பேர் குணமடைந்து 5663 பேர் சிகிச்சை  பெற்று வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 779 பேர் பாதிக்கப்பட்டு 7 பேர் மரணம் அடைந்து 253 பேர் குணம் அடைந்து தற்போது 518 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 731 பேர் பாதிக்கப்பட்டு 9 பேர் மரணம் அடைந்து 270 பேர் குணம் அடைந்து தற்போது 452 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது கோவை, நாமக்கல், திருப்பூர், தர்மபுரி  ஆகிய மாவட்டங்களில் அனைவரும் குணமடைந்து ஒருவருக்கு கூட பாதிப்பு இல்லை.