டில்லி:

ஓம் பிரகாஷ் ராவத் இன்று தலைமை தேர்தல் கமிஷனராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இதன் பின்னர் ஓம் பிரகாஷ் ராவத் பேசுகையில், ‘‘தமிழகத்தில் தேர்தலின் போது பணப்பட்டுவாடா மிகப்பெரிய சவாலாக உள்ளது.

ஒரு கதவை அடைத்தால், வேட்பாளர்கள் வேறு ஒரு கதவை திறந்து விடுகிறார்கள். பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் புதிய வியூகங்களை கையாள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.