சிங்கப்பூர்,
சிங்கப்பூரில் வசித்து வரும்  இந்தியர்களை கவுரவிக்கும் வகையில் சிங்கப்பூர் வீதிகளில் தீபாவளி அலங்காரம் செய்யப்பட்டு, தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி. இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
சிங்கப்பூரில் கடந்த வாரம் முதலே  இந்தியர்களை கவுரவிக்கும் வகையில் தீபாவளி பண்டிகையை அரசே கொண்டாடி வருகிறது.
singapor2
சிங்கப்பூரில் உள்ள  ரெயில் நிலையம் மற்றும் ரெயில் ஒன்றில் தீபாவளி பண்டிகையை  நினைவுபடுத்தும் வகையில் ரங்கோலி கோலங்கள், மயில் கோலங்கள், தோரணங்கள்  மற்றும் பட்டாசுகள், தீபங்கள் போன்ற வற்றை வரைந்து அத்துடன் ஹேப்பி தீபாவளி என்றும் எழுதி அக்குள்ள இந்திய மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தற்போது அங்குள்ள முக்கிய வீதிகளில் தீபாவளி பண்டிகையையொட்டி வண்ண வண்ண ஓவியங்களாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகிறது.
singapor-train
இந்தியர்களையும், இந்தியர்களின் கலாச்சாரத்தையும் ஆதரிக்கும் வகையில் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
அரசின் இந்த செயல்  அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களிடையே சந்தோசத்தை ஏற்படுத்தி உள்ளது. சிங்கப்பூர் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10% இந்தியர்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே,  அமெரிக்க அரசு தீபாவளியை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு தபால்தலை ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல்  இங்கிலாந்து பிரதமர் தெரசாமே இந்தியர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடியதும் சிறப்புக்குறியது.
singapore