டில்லி:

ணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் டி.கே.சிவகுமார் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு அக்டோபர் 1ந்தேதி வரை காவலை நீடித்து டில்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவகுமார் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஆகஸ்டு மாதம் 30-ம் தேதி  அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். 4 நாட்கள் தொடர் விசாரணைக்கு பிறகு கடந்த 3-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு சொந்த மான இடங்கில் நடத்திய சோதனையில் ரூ.8.50 கோடி சிக்கிய வழக்கினை அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. கைது செய்யப்பட்ட அவரை, விசாரணைக்காக அவரை 17-ம் தேதி (இன்று) வரை  காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரித்து வந்தது.

இந்த நிலையில், இன்று டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டி.கே. சிவகுமார் மேலும்  14 நாட்கள் (அக்டோபர் 1) வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

டி.கே.சிவகுமாருக்காக  ‘மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி மற்றும் முகுல் ரோஹத்கி ஆகியோர் ஜாமீனுக்காக வாதிட்டனர். ஆனால், அவரது ஜாமின் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவரை அடுத்தமாதம் 1ந்தேதி வரை காவலில்வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும்,  அவரது உடல்நிலை காரணமாக, அவரை முதலில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும்,  மருத்துவர் அறிவுறுத்தும் பட்சத்தில், அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும், இல்லையேல் அவரை  திகார் சிறைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து அவர் உடல்நிலை குறித்து மருத்துவமனையில் செக்கப் செய்ததை தொடர்ந்து, டி.கே.சிவக்குமார் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.