சென்னை: 2020 – 2021 மத்திய பட்ஜெட் நிறைகளும், குறைகளும் சமமாக இருக்கின்ற பட்ஜெட்டாகவே பார்க்க முடிகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:  வளர்ச்சி என்று பார்த்தால் வருமான வரி விகிதம் குறைப்பு, வீட்டுக் கடன் சலுகை, விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன், வேளாண்மை உள் கட்டமைப்பு, ஜவுளி தொழில்நுட்பம், ஆகியவற்றில் வேலை வாய்ப்பை உருவாக்குவது, விவசாயத்தை இரட்டிப்பாக்குவது, ஏற்றுமதியை ஊக்குவிப்பது என்று பல வரவேற்கக்கூடிய அம்சங்கள் இருக்கும் பொழுதும், பல குறைகளும் இருக்கின்றது.

இன்றைய பொருளாதாரத்தின் நிலையை அறிந்து தனிநபரின் வருமானத்தை உயர்த்த கூடிய பொருளாதார வளர்ச்சிக்கான திட்டம் இல்லாதது ஏமாற்றத்தை தருகிறது. பல கோடி பேர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள், இன்னும் பல மடங்கு வேலைவாய்ப்பை உயர்த்துவதற்கு நல்ல செயல் திட்டங்களை அறிவிக்கவில்லை.

விவசாயத்திற்கு மிக முக்கிய காரணமாக இருக்கும் நதிகள் இணைப்பு, நதிகள் இணைப்புக்காக எந்த ஒரு அறிவிப்பும் இந்த மத்திய பட்ஜெட் திட்டத்தில் இல்லை, எனவே குறைகளும் நிறைந்திருக்கிறது.

மத்திய அரசின் இந்த பட்ஜெட் நிறைகளும், குறைகளும் இணைந்த மத்திய அம்சம் கொண்ட மத்திய பட்ஜெட்டாகவே பார்க்கமுடிகிறது என்று கூறி இருக்கிறார்.