சென்னை:
ட்டமன்ற தேர்தலில் தேமுதிக 234 தொகுதியிலும் போட்டியிட தயார் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இந்த நிமிடம் வரையில் அதிமுக கூட்டணியில் தொடர்வதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இந்த நிமிடம் வரையில் அதிமுக கூட்டணியில் தொடர்வதாக கூறியுள்ளார். ஆனாலும் வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்துப் போட்டியிட தயாராக உள்ளது எனவும், வரும் ஜனவரியில் விஜயகாந்த் தலைமையில் நடக்கும் கட்சிப் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் இது குறித்து முடிவு எடுத்து, கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அவர் அறிவிப்பார் எனவும் கூறியுள்ளார்.

இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் விஜயகாந்த் பங்கேற்பார் டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், நிவர், புரவி புயல் தாக்கத்தின் போது தமிழக அரசின் செயல்பாடுகளில் நிறையும் குறையும் உள்ளது. நீர் நிலைகள் தூர்வாரப்படாமல் வெள்ள நீர் வீணாக கடலில் கலந்துள்ளது இது சீரமைக்கும் கடமை அரசுக்கு தான் உள்ளது இவ்வாறு அவர் கூறியுள்ளார்.