சென்னை: தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. அதன் காரணமாக பல்வேறு மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கொரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந் நிலையில் தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டதால் பரிசோதனை மேற்கொண்ட அவருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதனை தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் எல்.கே.சுதீஷ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.