சென்னை:

மிழகத்தில் மே19ந்தேதி வாக்குப்பதிவு  நடைபெறவுள்ள 4 தொகுதி சட்டமன்ற இடைத்தோ்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு அளிக்கும் என்றும்,  தேமுதிக பொதுச் செயலாளா் விஜயகாந்த் அறிவித்துள்ளாா்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று போட்டியிட்ட தேமுதிக தற்போது நடைபெற உள்ள 4 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுகவுக்கே ஆதரவு என்று அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக தேமுதிக பொதுச் செயலாளா்  வெளியிட்டுள்ள அறிவிப்பில், கூட்டணி தா்மத்தின் அடிப்படையில், தமிழகத்தில் நடைபெறவுள்ள 4 தொகுதி இடைத்தோ்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாகவும், அதிமுகவின் வெற்றிக்காக தேமுதிக தொண்டா்கள் பாடுபட வேண்டும் என்றும் கூறி உள்ளார்.