சென்னை: மார்ச் 2 முதல் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மார்ச் 2 முதல் 6-ம் தேதி வரை மாவட்ட வாரியாக காலை, மாலை என தேர்தலில் போட்யிட வேட்புமனுத் தாக்கல் செய்தவர்களுக்கு, வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

”கழக தலைவர்  மு.க. ஸ்டாலின்  2021-சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு வழங்கிய திமுகவினரிடம் 02-03-2021 முதல் 06-03-2021 வரை நேர்காணல் நடத்துகிறார்” என தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.