சென்னை: கொரோனா தொற்று காரணமாக சென்னை தியாகராய நகர் தொகுதி திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நெருங்கிய நண்பரான பழக்கடை ஜெயராமன் மகன் ஜெ.அன்பழகனின் தம்பி ஜெ.கருணாநிதி. ஏப்ரல் 6ம் தேதி முடிந்த சட்டசபை தேர்தலில் தி,நகர் தொகுதி வேட்பாளராக இவர் போட்டியிட்டுள்ளார்.

அண்மையில் தான் இவரது அண்ணன் ஜெ. அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி மரணம் அடைந்தார்.  ஜெ. அன்பழகனின் மரணம் திமுகவுக்கு பெரும் துயரத்தை கொடுத்தது.

இந் நிலையில், சட்டசபை தேர்தலில் போட்டியிட்டுள்ள ஜெ. கருணாநிதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.