சென்னை:

திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.

திமுக தலைமையில் நடைபெற்ற முழு அடைப்பை தொடர்ந்து, விவசாயிகள் பிரச்சினையில் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து விவாதிக்க திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில்  இன்று கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த  மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முழு அடைப்புக்கு காரணமாக இருந்தவர்களுக்கு நன்றி என்றும்,  விவசாயிகள் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்தில் விலக்கு அளிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிகிறது.