சென்னை:

மிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் வரும் 20-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்து உள்ளார்.

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்களின் கூட்டம் நடைபெறும் என்றும், அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு, பெரும்பான்மை கோரிய வழக்கு, தகுதி நீக்கம் வழக்கு, குட்கா விவகாரம் போன்ற பல பிரச்சினைகள் காரணமாக பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், வரும் 20-ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளரான க.அன்பழகன் அறிக்கை விடுத்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது,  வரும் 20 -ஆம் தேதி அண்ணா அறிவாலயகத்தில் மாவட்ட செயலாளர்களுக்கான கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரி பார்த்தல், கட்சியின் ஆக்கப்பணிகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும். இதில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.