காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் கீரப்பாக்கம் பகுதி திமுக செயலாளர் ரமேஷ். இவர் கூடுவாஞ்சேரி அருகே இன்று தீக்குளித்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தீக்குளித்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.