சென்னை

காக்னிசண்ட் நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்றா தமிழக அதிகாரிகள் குறித்து விசாரிக்க திமுக சிபிஐ இடம் மனு அளித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த காக்னிசண்ட் நிறுவனம் சென்னை சோழிங்க நல்லூரில் ஒரு மாபெரும் வளாகத்தை அமைத்துள்ளது. இந்த கட்டிடத்துக்கு உரிமம் பெற அந்நிறுவனம் கட்டுமான நிறுவனத்தின் மூலம் தமிழக அதிகாரிகளுக்கு கோடிக் கணக்கில் லஞ்சம் அளித்ததாக அமெரிக்க நீதிமன்றம் குற்றம் சாட்டி உள்ளது. இதை ஒப்புக் கொண்ட காக்னிசண்ட் அபராதம் செலுத்தி உள்ளது.

அமெரிக்க நீதிமன்றம் தமிழக அதிகாரிகளின் பெயரை வெளியிடவில்லை. இந்த லஞ்ச விவகாரம் குறித்து தமிழ எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் திமுகவின் முன்னள் அமைச்சர் தா மோ அன்பரசன் நேற்று சிபிஐ தென் மண்டல இயக்குனரிடம் இது குறித்து விசாரித்து வழக்கு தொடர கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளர்.

அந்த மனுவில் காணப்படுவதாவது :

”அமெரிக்க நாட்டின் நியூஜெர்சியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல் பட்டு வரும் பன்னாட்டு நிறுவனமான காக்னிசன்ட் டெக்னாலஜி சொலுசன்ஸ் நிறுவனம் அதன் இந்திய கிளை நிறு வனமான காக்னுசன்ட் இந்தியா என்ற பெயரில் இந்தியா முழுவதும் இயங்கி வருகிறது.

தா மோ அன்பரசன்

இந்த நிறுவனத்தின் மீது 2014 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் பங்குச் சந்தை ஆணையம், (செக்யூரிடிஸ் அன்ட் எக்சேஞ்ச் கமிஷன்) காக்னிசன்ட் டெக் னாலஜி சொலூசன்ஸ் குழந்தைகள் வளாகத்தில் 27 லட்ச சதுர அடியில் வளாகத்தைக் கட்டுவதற்கும் காஞ்சிபுரம், மாவட்டம் சிறுசேரியில் வளாகம் கட்டு வதற்கும் அனுமதி பெறுவதற்காக தமிழ் நாடு அரசின் உயர் அதிகாரிகளுக்கு 2 மில்லியன் (20 லட்சம்) டாலர் லஞ்சம் அளித்தது தொடர்பாக புலனாய்வை மேற்கொண்டது.

அமெரிக்க பங்குச் சந்தை ஆணைய குற்றச்சாட்டின்படி, காக்னிசன்ட் நிறுவனத்தலைவர் கார்டன் கோபர்ன்னும் தலைமை சட்ட அதிகாரி ஸ்டீவன் ஈ.ஸ்ச் வாட்சும் லஞ்சம் கொடுக்க உத்தரவிட்டுள்ளனர். இந்த லஞ்சத்தை தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை மற்றும் சென்னைப் பெருநகர மேம்பாட்டு ஆணைய (சி.எம்.டி.) உயர் அதிகாரிகள் கோரியிருந்தனர்.

அதற்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்திடம் அவர்கள் அதைக் கோரியிருந்தனர். தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழக அதிகாரிகளும் லஞ்சம் கோரியிருந்தனர். மாநில சுற்றுச்சூழல் அதிகாரிகளும் லஞ்சம் கோரியிருந்தனர்.

ஒப்பந்த நிறுவனம் காக்னிசன்ட் இந்தியா நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் அதிகாரிக்கு இது பற்றி தெரிவித்தது. அவர் அந்தச் செய்தியான பொது ஊழியர்கள் லஞ்சம் கோரும் தகவலை தனது மேற்பார்வையாளர் மற்றும் நடவடிக் கைகள் அதிகாரி மூலம் மேலதிகாரி களுக்கு தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து 21.4.2014 மற்றும் 22.4.2014 ஆகிய இரு நாட்களும் இந்தியாவில் உள்ள ரியல் எஸ்டேட் அதிகாரி வீடியோ கான்பிரன்ஸ் மூலம், அமெரிக்காவில் உள்ள மூத்த செயல் மற்றும் மூத்த சட்ட அலுவலர்களுடன் விரிவான கலந்தாலோசனைகளில் ஈடுபட்டார்.

அப்போது லஞ்சம் கொடுக்கும் நடவடிக்கையை எப்படி மேற்கொள்வது என்று வழிகாட்டு முறைகளைக் கோரினார். மேலே குறிப்பிடப்பட்ட பொது ஊழியர்களுக்கும் பிற அரசு ஊழியர்களுக்கும் 2014 –ம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதத் தொடக்கத்தில் லஞ்சம் வழங்கப்பட்டது. அந்த வகையில் மொத்தம் 1.6 மில்லியன் டாலர் வழங்கப்பட்டது.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள உயர் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப் பட்டுள்ளது. அமெரிக்க நீதித்துறையும், அமெரிக்க அரசு வழிக்கறிஞர் அலுவலகமும் தொடர்ந்த வழக்கில் பங்குச் சந்தை ஆணையத்தில் லஞ்சம் கொடுத்ததை ஒப்புக்கொண்டு காக்னிசன்ட் நிறுவன அதிகாரிகள் தங்கள் வாதத்தை பதிவு செய்தனர்.

காக்னிசண்ட் நிறுவனத் தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அமெரிக்க பங்குச் சந்தை ஆணையம் வெளியிட்ட செய்தியில் “தமிழ்நாட்டின் சிறுசேரியில் லஞ்சம் அளித்தது’’ என்றத் தலைப்பில், கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“சிறுசேரியில் காக்னிசன்ட் இந்தியா நிறுவனம் முதல் ஒப்பந்த அமைப்புக்கு  இந்திய அதி காரிகளுக்கு 8 லட்சத்து 40 ஆயிரம் டாலர் லஞ்சம் வழங்குவதற்கு அதிகாரம் அளித்தது. இது திட்ட அனுமதி உள்பட கட்டுமானம் தொடர்பான ஏராளமான அனுமதிகளும் உள்ளூர் மின்சார வாரியத்திடம் மின்சார அனுமதி மற்றும் சுற்றுச்சூழல் அனுமதிக்காகவும் ஒப்பந்த நிறுவனத்தால் 2012 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அந்த ஆண்டின் பிற்பகுதியில் காக்னிசன்ட் மென்பொருள் நிறுவனம் அந்த அனுமதிகளைப் பெற்றது. ஒப்பந்த நிறுவனம் ஏராளமான தகுதியற்ற அல்லது நியாயமற்ற வேலைகளை மாற்றுவதற்கு (மாறுதல் ஆணைகளுக்கான) வேண்டுகோள்களைச் சமர்ப்பித்தது. போலியான விளக்கங்கள் எல்லாம் திருத்தப்பட்ட பிறகு, தொடக்கத்தில் கோரிக்கைகளை நிராகரித்த, காக்னிசன்ட் இந்தியா நிறுவனம் மாறுதல் ஆணையை அங்கீகரித்தது.

லஞ்சம் வழங்கியதற்காக முதல் ஒப்பந்த அமைப்புக்கு காக்னிசன்ட் இந்தியா நிறுவனம் 2015 முதல் 2016 வரை பல்வேறு தவணைகளில் பணம் வழங்கி யுள்ளது’’. என  குறிப்பிடப்பட்டுள்ளது.

காக்னிசன்ட் இந்தியா லிமிடெட் நிறுவனம் குறிப்பிட்ட இடத்தில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளவும் சுற்றுச்சூழல் அனுமதி பெறவும், மேற்கண்டவைகளுக்கு திட்ட அனுமதி பெறவும், மின் தொடர்பு பெறுவதற்கான பணிகள் மேற்கொள்வதற்கும் இவைகளுக்கான அனுமதியை அந்நிறுவனத்திற்கு வழங்கு வதற்காக தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி லஞ்சத் தொகையை அதிகாரிகள் பெற்றுள்ளனர்.

தமிழக அதிகாரிகள் இந்த லஞ்சப் பணத்தை நேரடியாகப் பெற்றுக் கொண்டதாகக் கூறப்பட்டாலும், வீட்டுவசதி, மின்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்களுக்குத் தெரிந்தே அது தொடர்பான கோப்புகள் நகர்ந்துள்ளன என்பதால், அந்த லஞ்சப் பணம், துறை அதிகாரிகளும், அமைச்சர்களும் பங்கு போட்டுக் கொண்டுள்ளனர் என்பதுதான் உண்மையாகும்

அந்நிறுவனம் இந்தத் தகவலை அமெரிக்க பங்குச் சந்தை ஆணையத் திடம் தெரிவித்துள்ளது. பங்குச் சந்தை ஆணையத்தின் முன் உள்ள வழக்கை சரி செய்து கொள்வதற்காகவும், 25 மில்லியன் டாலர் தொகை அபராதமாக கட்ட ஒப்புக் கொண்ட நிலையில் மேற்கண்டவாறு அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, 15.2.2019 ஆம் தேதியிட்ட பங்குச் சந்தை ஆணைய உத்தரவுபடி, பிடியாணை வழங்க முடியாத குற்றச்சாட்டுகளை அது செய்துள்ளது என்பது தெளிவாகிறது.

இதில் பல்வேறு தவறுகளும் நடந்துள்ளன என்பதோடு லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழும் பல குற்றங்கள் இருக்கின்றன. ஆனாலும், அவைகள் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் விசாரணை நடத்த முடியாது.

இந்த விவகாரத்தில், அரசு உயர் அதிகாரிகளும் இதில் சம்மந்தப்பட்டுள்ளனர் என்பதால் மேற்காணும் குற்றங்கள் மீது உரிய நியாயமான நடவடிக்கை மேற்கொள்ளவும், நீதித்துறையில் பொதுமக்களுக்கு உள்ள நம்பிக்கையை நிலை நாட்டவும் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்வது மிக அவசிய மாகும்.

ஆகவே, குற்றச்சாட்டைப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வெகு விரைவில் சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் சி.பி.ஐ. இறுதி அறிக்கையை தாக்கல் செய்து சட்ட விதியை நிலைநாட்டும்படி கேட்டுக் கொள்கிறேன். அமெரிக்கப் பங்குச் சந்தை ஆணையத்தின் 15.2.19 தேதிய உத்தரவினை இத்துடன் இணைத்துள்ளேன்.”

என தா மோ அன்பரசன் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.