சென்னை:

பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் தன்னிச்சையாக உதவ தடை விதித்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுஉள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தன்னார்வலர்கள் உதவி சென்ற பெயரில் அரசியல் கட்சிகள் உள்பட பல தரப்பினர்,  மக்கள் கூட்டம் கூட்டப்படுவதாகவும், இதனால் கொரோனா பரவலுக்கு சாத்தியம் உள்ளதாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து,  உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோர், முதியோருக்கு தன்னார்வலர்கள், பொதுமக்கள் பலர் உணவு தயாரித்து விநியோகிக்கின்றனர். சிலர் அரிசி, பருப்பு உட்பட மளிகை பொருட்களை வீடு தேடி வழங்குகின்றனர். இதற்காக வெளியே செல்லும் தன்னார்வலர்கள், மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத நிலை உள்ளது. இதை தடுக்க, ஆதரவற்றோருக்கு நேரடியாக நிவாரண பொருட்கள் வழங்க தடை விதிக்கப்பட்டுவதாகவும்,  ஆதரவற்ற குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் தேவைக்கேற்ப வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. நிவாரண பொருட்களை வழங்க விரும்புவோர் கலெக்டர் அல்லது தாசில்தார் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அவர்கள் மூலம் நிவாரணம் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இது தன்னார்வலர்கள் மற்றும் அரசியல்கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசின் உத்தரவையெடுத்து, இரக்கமில்லாத எடப்பாடி அரசு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து இருந்தார். மேலும் வைகோ, டிடிவி, கமல்ஹாசன், நடிகர் லாரன்ஸ் உள்பட பல தரப்பில் அரசு உத்தவை வாபஸ்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில்,  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேவைப்ப டுபவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதை தடைசெய்த மாநில அரசின் முடிவை எதிர்த்து  திமுக. மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.