ழநியில் இன்று நடைபெற்ற, நடிகர் சந்திரசேகரின் மகள் திருமணத்தில், தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின், நடிகர்கள் சிவக்குமார், ராதாரவி ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

ஸ்டாலினை புகழும் ராதாரவி

மணமக்களை வாழ்த்திப் பேசிய நடிகர் ராதாரவி, “திராவிட குடும்பத்தில் நான் இணையும் வேளை வந்துவிட்டது” என்று பேசினார். மேலும், “முன்பே.கலைஞர் (கருணாநிதிஃ என்னிடம் ராதாரவி எப்பவும் இங்கதாண்டா (தி.மு.க.) இருக்கணும் என்று சொன்னார்” என்றும் ராதாரவி தெரிவித்தார். தொடர்ந்து மணமக்களை வாழ்த்திப் பேசிய அவர், “ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என்றும் தமிழகத்தை வழிநடத்த தகுதியான ஒரே தலைவர் அவர்தான்” என்றும் புகழ்ந்து பேசினார்.

ரசிக்கும் ஸ்டாலின்

ராதாரவியின் பேச்சை, மேடையில் இருந்த மு.க.ஸ்டாலின் ரசித்து கேட்டார்.

அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏவும், தற்போது வரை அக் கட்சியில் இருப்பவருமான ராதாரவி இப்டி பேசியது அரசியல் வரட்டாரத்தில் ஆச்சரியத்தை  ஏற்படுத்தி உள்ளது. “தி.மு.க.வில் இணைய ராதாரவி போட்டிருக்கும் அப்ளிகேசனாகவே அவரது பேச்சு” என்று சொல்லப்படுகிறது.

ஆக, விரைவில் ராதாரவி தி.மு.க.வில் இணையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.