திருவள்ளூர்:
.பி.எஸ்., ஈ.பி.எஸ். ஒன்றாக இருப்பது போல் நடிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை பகுதியில் இன்று பிரசாரம் செய்த முக ஸ்டாலின், 1962-ம் ஆண்டு அண்ணா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கேடுகள் போக்கிட திமுகவிற்கு ஆதரவு தாரீர் என்று சொன்னதாகவும், அதையேதான் தானும் தற்போது சொல்வதாகவும் கூறினார். ஊழல் வழக்கில் இருந்து தப்பிக்கவும், கொள்ளை அடித்த பணத்தை காக்கவுமே ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். ஒன்றாக இருப்பது போல நடிப்பதாகக் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், எம்.ஜி.ஆருடன் இருக்கும் புகைப்படத்தைக் காட்டிய ஸ்டாலின், அரசியலுக்கு வர வேண்டும் என தனக்கு அறிவுரை கூறியது எம்.ஜி.ஆர்.தான் எனவும் தெரிவித்தார். முதலமைச்சர் பழனிசாமி, எப்போதாவது எம்.ஜி.ஆரை பார்த்தது உண்டா எனவும் கேள்வி எழுப்பினார்.