சென்னை: நெல்லை சாலை விபத்தில் 5 பெண் தொழிலாளர்கள் பலியான சம்பவத்திற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது:

விவசாயப் பணிக்காக சரக்கு வாகனத்தில் சென்ற பெண் தொழிலாளர்கள் 5 பேர் நெல்லை – மணியாச்சி அருகே சாலை விபத்தில் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது.

சாலை பாதுகாப்பு மாதத்திலும்  ஏழைத் தொழிலாளர்களின் அவல நிலை தொடர்கிறது.ஆழ்ந்த இரங்கல்! தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.