சென்னை:

‘தந்தி’ தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என  திமுகவினருக்கு ,  திமுக தலைமை  தடை விதித்து உள்ளது.

தினசரி அரசியல் நிகழ்ச்சிகள் குறித்து, ஊடகங்களில் விவாதங்கள் நடைபெற்று வருவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், திமுக சார்பில் தொலைக்காட்சி ஊடகங்களில் கலந்துகொள்பவர்களுக்கு திமுக தலைமை தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதில், கழகத்தின் சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்ளும்  கழகத்தோழர்கள் இனிமேல், தந்தி தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.