சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா சிகிச்சைக்காக கடந்த 2ம் தேதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன். அவர் மிகவும்  கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறப்பட்டது.

நேற்று அவரது உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததாகவும், இன்று அவர் கண்விழித்து பார்த்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஆகையால் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந் நிலையில் மருத்துவமனை நிர்வாகமானது ஜெ.அன்பழகன் எம்எல்ஏ உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு மருத்துவமனை நிர்வாகம், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ஜெ.அன்பழகன் விரைவில் குணமாகி வீடு திரும்புவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம் என்ற செய்தி திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.