நாகர்கோவில்:
ன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் திமுக உடன்பிறப்புகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. இந்த நிலையில், ஊரடங்கு காலத்தில் மக்கள் சேவையாற்றிய அரசியல் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிகழ்வு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில்,  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ் குமாருக்கு நேற்று கொரோனா உறுதியான நிலையில், சுரேஷ்ராஜனுக்கு இன்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என இதுவரை 21 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.