சென்னை:

சட்டமன்ற கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய கட்சி கூட்டம் அதன் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை தொடங்கியது.

ஏப்ரலில் உள்ளாட்சி தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் வெற்றி பெறுவது பற்றி ஆலோசனை மற்றும் போக்குவரத்து தொழிலாளர் பிரச்னை, ஒகி புயல் பாதிப்பு, சட்டமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் போன்றவை குறித்து கூட்டத்தில் பேசப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.