சென்னை

டைத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக சட்டப்பேரவை திமுக உறுப்பினர்கள் 28 ஆம் தேதி பதவி ஏற்கின்றனர்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலுடன் கடந்த ஏப்ரல் 18 அன்று தமிழக சட்டப்பேரவையின் 18 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றன. அதன் பிறகு கடந்த 19 அம் தேதி அன்று 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தல்களின் வாக்குகள் கடந்த 23 ஆம் தேதி அன்று என்ணப்பட்டன.   இதில் 13 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 9 தொகுதிகளில் அதிமுக வென்றுள்ளது.

வெற்றி பெற்ற திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாளை மறுநாள் அதாவது 28 ஆம் தேதி தலைமை செயலகத்தில் சபாநாயகர் அறையில் பதவி ஏற்க உள்ளனர். இந்த பத்வி ஏற்பு திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறுகிறது.