சென்னை:  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், திமுக எம்.பி.க்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற 29-ஆம் தேதி தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர்ந்து, முதல்கட்டமாக,  ஜனவரி 29 முதல் பிப்ரவரி 30 வரையும், 2வது கட்ட அமர்வு மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம்  சென்னை – அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் ஆற்ற வேண்டிய பணிகள், பேசவேண்டிய விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.