சென்னை:

ஜார்கண்ட் மாநிலத்தில், ஜேஎம்எம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்துள்ள நிலையில், மாநில முதல்வராக ஜேஎம்எம் கட்சித்தலைவர்  ஹேமந்த் சோரன் வரும் ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்கிறார். இந்த  பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதாக தெரிவித்து உள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியை வீழ்த்தி  ஆட்சியை  கைப்பற்றி உள்ளது  ஜேஎம்எம் காங்கிரஸ் ஆர்ஜேடி கூட்டணி. இதையடுத்து அங்கு கூட்டணி அரசு ஆட்சி அமைக்ககிறது.

மாநில முதல்வராக ஜேஎம்எம் கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன் பதவி ஏற்க உள்ளார். துணைமுதல்வர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஹேமந்த் சோரன் தொலைபேசி மூலம் நேற்று அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து, நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள பதவி ஏற்பு விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.