சென்னை:

சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்து முடிந்த 18 சட்டசபை மற்றும் நடைபெற இருக்கும் 4 சட்டப் பேரவை தேர்தலுக்கான முடிவு மே 23-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், 3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு அதிமுக கொறடா பரிந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அதன்படி, 3 எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்தால், அவர் மீது திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும்.

3 பேர் மீதான நடவடிக்கை கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார்.