சென்னை:

ள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்  திமுக  முடிவு செய்துள்ளதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

அதன்படி, வரும் 14ந்தேதி முதல் 20ந்தேதி வரை உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பங்களை அளிக்கலாம் என்று கூறப்பட்டு உள்ளது.

இன்று காலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், தி.மு.க முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் ஐ. பெரியசாமி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதையடுத்து பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அதையடுத்து, உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக தயாராக இருப்பதாக கூறியவர்,  திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்பமனுக்கள் கொடுக்கலாம் என்wh;u/

உள்ளாட்சி தேர்தலிலும் நிச்சயமாக திமுக கூட்டணி தொடரும் எனவும் தேர்தல் தேதி அறிவித்த பின் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனக் கூறினார்.

விருப்பமனு கட்டண விபரங்கள்:

மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் – ரூ.50,000

மாமன்ற உறுப்பினர் – ரூ.10,000

நகர்மன்றத் தலைவர் – ரூ.25,000

நகர்மன்ற உறுப்பினர் -ரூ.5000

பேரூராட்சித் தலைவர் – ரூ.10,000

பேரூராட்சி மன்ற உறுப்பினர் – ரூ.2500

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் – ரூ.10,000

ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் – ரூ.5000

இதில் ஆதிதிராவிடர் , பெண்களுக்கான ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட விரும்புவோர் கட்டணத் தொகையில் பாதி மட்டும் செலுத்த வேண்டும்.

விருப்பமான படிவத்தை 10 ரூபாய் செலுத்தி மாவட்ட தலைமை அலுவலகத்தில் பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.