சென்னை:

திமுகவின் 15வது பொதுத்தேர்தல் வரும் 21-02-2020 அன்று முதல்கட்டமாக கிளைக் கழகங்களுக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெறும் இன்று திமுக தலைமை அறிவித்து உள்ளது.

இதுகுறித்து திமுகழக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15வது பொதுத்தேர்தல் எதிர்வரும் 21-02-2020 அன்று முதல்கட்டமாக கிளைக் கழகங்களுக்கு தொடங்கி நடைபெற உள்ளது. கழக சட்டத்திட்டங்களின் படி பல கட்டங்களாக கழக அமைப்புகளுக்கு தேர்தல்கள் நடைபெறும்.

முதல் கட்டமாக கிளைக்கழகங்களுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும்,  அதனைத்தொடர்ந்து பேரூர்க்ழகம், மற்றும் மாநகர வட்டக்கழக தேர்தல்கள், பின்பு ஒன்றி ஒன்றிய – நகர – மாநகர  பகுதிக்கழகத் தேர்தல்களும் பின்னர்  மாநகரக்கழகத் தேர்தல்களும் நடைபெறும்.

இவற்றைத் தொடர்ந்து மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைக் கழகப் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுகான தேர்தல்கள் நடைபெற்ற பின்னர், புதிய பொதுக்குழு கூட்டப்பட்டு, தலைவர்,  பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் கழக தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடைபெறும்

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.