சென்னை:

சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற காவிரி நதி நீர் பிரச்சினை தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய  தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது,  காவிரி நதிநீர் பங்கீடு விவகரத்தில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட, அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் திமுக துணை நிற்கும் என்றார்.

காவிரிநதி நீர் விவகாரத்தில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, எடுக்கப்பட வேடிய   அடுத்தகட்ட நடவடிக்கை  குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அனைத்து கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், காவிரி விவகாரத்தில் அரசு தொடர் நடவடிக்கைகளை விரைவாகவும், உறுதியாகவும் எடுக்க அனைவரது ஆலோசனைகளும் தேவை. அனைத்து கட்சி தலைவர்கள் தங்களது ஆலோசனையை வழங்க வேண்டும் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து பேசிய  திமுக செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், காவிரி விவகாரததில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட தமிழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் திமுக துணை நிற்கும் என்றார்.

நீர்ப்பாசனத்தைப் பொதுப்பணி துறையில் இருந்து பிரித்து புதிய அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்றும், நீர் பாதுகாப்பு ஆணையம் அமைத்து நீர்வளத்தை சேமிப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் தேவை என்றும் கூறினார்.

உச்சநீதி மன்றம் குறைத்துள்ள 14 டி.எம்.சி. நீரைப் பெறுவதற்கான வழிமுறைகள் என்ன என்பதை அரசு யோசிக்க வேண்டும் என்றும் கூறினார்.