மரணம் மனிதனுக்கு ஏற்படக்கூடிய ஒன்று தான் என்று ஏற்றுக்கொள்ளும் எண்ணத்தை நிலைநிறுத்துமா ? அல்லது ஆயுளை நீட்டிப்பதற்கான மனிதனின் முயற்சியை மேலும் வலுப்படுத்துமா ?, இந்த கொரோனா வைரஸ்.

இன்றைய நவீன உலகம், மனிதர்கள் மரணத்தை முறியடிக்கவும் தோற்கடிக்கவும் முடியும் என்ற புரட்சிகர புதிய நம்பிக்கையால்  வடிவமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றின் பெரும்பகுதி, மனிதர்களின் அணுகுமுறை,  மரணத்தை அமைதியாக ஏற்றுக்கொள்வதாகவே இருந்துள்ளது.

நவீன யுகத்தின் பிற்பகுதி வரை, பெரும்பாலான மதங்களும் சித்தாந்தங்களும் மரணத்தை ‘மனித தர்மமாக’, தவிர்க்க முடியாத விதியாக மட்டுமல்லாமல், வாழ்க்கையின் அர்த்தமாகவும் உபதேசித்தது. கடைசி மூச்சை நிறுத்தியபின் தான் மனித வாழ்வின் அர்த்தமே இருப்பதாக கூறியது.  வாழ்க்கையின் உண்மை தத்துவத்தை மரணத்தில்  தான் உணர்த்தியது. மரணத்தில்தான் இரட்சிப்பை, அல்லது  தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்று கூறியது.

ஆகவே, சொர்க்கம், நரகம் அல்லது மறுபிறவி இல்லாமல்மரணம் இல்லாத உலகில் –  கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும் இந்து மதம் போன்ற மதங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை. வரலாற்றின் பெரும்பகுதி, மரணத்திற்கு அர்த்தம் கொடுப்பதிலேயே மனித மனங்கள் மும்முரமாக இருந்தன, அதைத் தோற்கடிக்க முயற்சிக்கவில்லை. வேதங்கள், பைபிள், குர்ஆன் மற்றும் எண்ணற்ற பிற புனித நூல்கள் மற்றும் கதைகள் மூலம், கடவுள் அல்லது அண்டவெளி அல்லது இயற்கையின்  கட்டளைப்படியே  மனிதர்கள்  மரணிக்கிறார்கள்   என்பதை போதிப்பதால், அந்த விதியை மனத்தாழ்மையுடனும் கருணையுடனும் நாம்  ஏற்றுக்கொண்டோம்.

அதுபோல், கடவுள் ஒருநாள்  மறுஅவதாரம் எடுத்து நம்மை மரணத்தில் இருந்து மீட்பார் எனும் உளவியல் கருத்துகளையும் ஏற்றுக்கொண்டோம். ஆனால் இதுபோன்ற நிகழ்வுகளைத் திட்டமிடுவது மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது.

பின்னர் அறிவியல் புரட்சி வந்தது. விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை, மரணம் ஒரு தெய்வீக ஆணை அல்ல – இது ஒரு தொழில்நுட்ப பிரச்சினை மட்டுமே. மனிதர்கள் இறப்பது கடவுள் அவ்வாறு சொன்னதால் அல்ல, ஆனால் சில தொழில்நுட்ப குறைபாடுகளால் தான்.

இதயம் இரத்தத்தை செலுத்துவதை நிறுத்துகிறது. புற்றுநோய் கல்லீரலை அழித்துவிட்டது. வைரஸ்கள் நுரையீரலில் பெருகும். இந்த தொழில்நுட்ப சிக்கல்களுக்கு என்ன காரணம்? பிற தொழில்நுட்ப சிக்கல்கள்.

போதுமான ஆக்ஸிஜன் இதய தசையை எட்டாததால் இதயம் இரத்தத்தை செலுத்துவதை நிறுத்துகிறது. சில மரபணு மாற்றங்கள் காரணமாக கல்லீரலில் புற்றுநோய் செல்கள் பரவுகின்றன. பஸ்ஸில் யாரோ தும்மியதால் வைரஸ்கள் என் நுரையீரலில் குடியேறின. உளவியல் ரீதியாக இதனை மறுப்பதற்கில்லை.

ஒவ்வொரு தொழில்நுட்ப சிக்கலுக்கும் ஒரு தொழில்நுட்ப தீர்வு இருப்பதாக அறிவியல் நம்புகிறது. மரணத்தை வெல்ல கிறிஸ்துவின் இரண்டாவது வருகைக்காக நாம் காத்திருக்க தேவையில்லை. ஒரு ஆய்வகத்தில் இரண்டு விஞ்ஞானிகள் அதை செய்ய முடியும். பாரம்பரியமாக மரணத்திலிருந்தது காப்பது என்பது பூசாரிகள் மற்றும் இறையியலாளர்களை சார்ந்தது, இப்போது அது  ஆய்வக வெள்ளை கோட்டுகளில் உள்ளவர்களை சாரும்.

இதயம் படபடக்கும் என்றால், நாம் அதை பேஸ்மேக்கர் மூலம் சமன்செய்யலாம்  அல்லது இதயமாற்று மூலம் புதிய இதயத்தை பெறலாம். புற்றுநோய் பரவினால்,  அதை நாம் கதிர்வீச்சால் கொல்லலாம். வைரஸ்கள் நுரையீரலில் பெருகினால், அவற்றை நாம் சில புதிய மருந்துகளால் அடக்கலாம்.

தற்போது நம்மால் அனைத்து தொழில்நுட்ப சிக்கல்களையும் தீர்க்க முடியாது என்பது உண்மை. ஆனாலும்  நாம் அதற்காக செயல்படுகிறோம். சிறந்த மனித மனங்கள் மரணத்திற்கு காரணம் சொல்ல தங்கள் நேரத்தை வீணாக்கவில்லை. மாறாக, மனித ஆயுளை நீட்டிப்பதில் அவர்கள் மும்முரமாக இருக்கிறார்கள்.

நோய் மற்றும் முதுமைக்கு காரணமான நுண்ணுயிரியல், உடலியல் மற்றும் மரபணு அமைப்புகளை அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர், மேலும் புதிய மருந்துகள் மற்றும் புரட்சிகர சிகிச்சைகளை உருவாக்குகிறார்கள்.

ஆயுளை நீட்டிப்பதற்கான அவர்களின் போராட்டத்தில், மனிதர்கள் குறிப்பிடத்தக்க வகையில் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த இரண்டு நூற்றாண்டுகளில், உலகெங்கிலும்  சராசரி ஆயுட்காலம் 40 வயதில் இருந்து 72 ஆகவும், சில வளர்ந்த நாடுகளில் 80 வயது-க்கும் மேலாகவும் உயர்ந்துள்ளது.

குறிப்பாக குழந்தைகள் மரணத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதில் வெற்றி பெற்றுள்ளனர். 20 ஆம் நூற்றாண்டு வரை, குறைந்தது மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் இளம்வயதிலேயே இறந்தன.

இளைஞர்கள் வழக்கமாக குழந்தை பருவ நோய்களான வயிற்றுப்போக்கு, அம்மை மற்றும் பெரியம்மை நோய்களுக்கு பலியாகினர். இங்கிலாந்தில் 17-ம் நூற்றாண்டில் பிறந்த, ஒவ்வொரு 1,000  குழந்தைகளில் 150 குழந்தைகள் பிறந்த முதல் ஆண்டிலேயே  இறந்தன, தவிர  700 பேர் மட்டுமே 15 வயதை அடைந்தனர்.

இன்று இங்கிலாந்தில், 1,000 குழந்தைகளில் ஐந்து பேர் மட்டுமே முதல் ஆண்டில் இறக்கின்றனர், மேலும் 993 பேர் தங்கள் 15 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். ஒட்டுமொத்த உலகில், குழந்தை இறப்பு 5% க்கும் குறைவாக உள்ளது.

வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கும் நீடிப்பதற்கும் தாம்  மேற்கொண்ட முயற்சியில் மனிதர்கள் மிகவும் வெற்றிகரமாக இருக்கிறார்கள், நமது உலகக் கண்ணோட்டம் ஆழமான முறையில் மாறிவிட்டது.

பாரம்பரிய மதங்கள் மரணத்திற்கு பின்னான  வாழ்க்கையின் அர்த்தத்தை முக்கிய ஆதாரமாகக் கருதினாலும், 18 ஆம் நூற்றாண்டின் தாராளமயம், சோசலிசம் மற்றும் பெண்ணியம் போன்ற சித்தாந்தங்களால், மரணத்திற்கு பின்னான   வாழ்க்கையில் அனைத்து ஆர்வத்தையும் இழந்தது.

ஒரு கம்யூனிஸ்டுக்கு அவன் அல்லது அவள் இறந்த பிறகு என்ன நடக்கும்? ஒரு முதலாளிக்கு என்ன நடக்கும்? ஒரு பெண்ணியவாதிக்கு என்ன நடக்கும்? கார்ல் மார்க்ஸ், ஆடம் ஸ்மித் அல்லது சிமோன் டி பியூவோயர் ஆகியோரின் எழுத்துக்களில் பதிலைத் தேடுவது அர்த்தமற்றது.

மரணத்திற்கு ஒரு முக்கிய பங்கை வழங்கும் ஒரே நவீன சித்தாந்தம் தேசியவாதம். தேசத்திற்காக யார் இறந்தாலும் அதன் நினைவில்  என்றென்றும் வாழ்வார்கள் என்று கவிதைகள் மற்றும் முக்கிய தருணங்களில் தேசியவாதம் உறுதியளிக்கிறது.

ஆயினும்கூட இந்த வாக்குறுதி மிகவும் தெளிவற்றது, பெரும்பாலான தேசியவாதிகள் கூட இதை என்ன செய்வது என்று தெரியவில்லை. உண்மையில் நீங்கள், “நினைவில் வாழ்வது” என்பது  எப்படி?

நீங்கள் இறந்துவிட்டால், மக்கள் உங்களை நினைவில் வைத்திருக்கிறார்களா இல்லையா என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? வூடி ஆலனிடம்  ஒரு முறை “உங்கள் திரைப்பட ரசிகர்களின் நினைவில் என்றென்றும் வாழ விரும்புகிறீர்களா”  என்று கேட்டதற்கு. ஆலன்,  “நான் என் வீட்டில் தான் வாழ விரும்புகிறேன்” என்று பதிலளித்தார்

பல பாரம்பரிய மதங்கள் கூட இந்த மாறுதலில் கவனம் செலுத்தி,  மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் சொர்கத்திற்கு வாக்குறுதி அளிப்பதற்குப் பதிலாக,  இந்த வாழ்க்கையில் உங்களுக்காக என்ன செய்ய முடியும் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

தற்போதைய தொற்றுநோய் மரணத்திற்கான மனித மனப்பான்மையை மாற்றுமா ? என்றால், அநேகமாக இல்லை. அதற்கு நேர்மாறானது. கோவிட் -19 மனித உயிர்களைப் பாதுகாப்பதற்கான நமது முயற்சிகளை இரட்டிப்பாக்கக்கூடும். கோவிட் -19 க்கு எதிரான இந்த கலாச்சாரம்,  சீற்றம் மற்றும் நம்பிக்கையின் கலவையே தவிர பணிந்ததாக அர்த்தம் அல்ல.

நவீன காலத்திற்கு முந்தைய இடைக்கால ஐரோப்பா போன்ற சமூகத்தில், தொற்றுநோய் வெடித்தபோது, மக்கள் நிச்சயமாக தங்கள் உயிருக்கு அஞ்சினர் மற்றும் அன்புக்குரியவர்களின் மரணத்தால் பேரழிவிற்கு ஆளானார்கள்.

உளவியலாளர்கள் இதை “கல்வியின் பயனற்ற  தன்மை” என்று அழைத்தனர். இது கடவுளின் விருப்பம் – அல்லது மனிதகுலத்தின் பாவங்களுக்கு தெய்வீக பழிவாங்கல் என்று மக்கள் தங்களுக்குள் கூறிக்கொண்டார்கள்.

கடவுள் நன்கு அறிவார். பொல்லாத மனிதர்கள் அதற்கு தகுதியானவர்கள். நீங்கள் பார்ப்பீர்கள், இது முடிவில் சிறந்ததாக மாறும். கவலைப்பட வேண்டாம், நல்ல மனிதர்கள் பரலோகத்தில் தங்கள் வெகுமதியைப் பெறுவார்கள். மருந்து தேடும் நேரத்தை வீணாக்காதீர்கள். இந்த நோய் எங்களை தண்டிக்க கடவுளால் அனுப்பப்பட்டது.

இந்த தொற்றுநோயை மனிதர்கள் தங்கள் புத்தி கூர்மை மூலம் சமாளிக்க முடியும் என்று நினைப்பவர்கள் மாயையினால் வெறுமனே தங்கள் மற்ற குற்றங்களுக்கு  பாவத்தை சேர்க்கிறார்கள். கடவுளின் திட்டங்களைத் தடுக்க நாங்கள் யார்? ” இப்படியாக கூறி எதிர்வினை ஆற்றாத கலாச்சாரத்தினால் பணிந்ததும் ஒன்றாகும்.

இன்றைய அணுகுமுறை இதற்கு நேரெதிரானது.   ரயில் விபத்து, கொழுந்துவிட்டு எரியும் தீ,  சூறாவளி போன்ற, சில பேரழிவுகள் பலரைக் கொல்லும் போதெல்லாம் கூட, இதை நாம் தெய்வீக தண்டனை அல்லது தவிர்க்க முடியாத இயற்கை பேரழிவு என்று பார்க்காமல் தடுக்கக்கூடிய மனித தோல்வி என்று கருதுகிறோம்.

ரயில்வே நிறுவனம் அதன் பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தில் ஈடுபடவில்லை, நகராட்சி சிறந்த தீ தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை,  மற்றும் அரசாங்கம் விரைவாக உதவியை அனுப்பியிருந்தால் – இந்த மக்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறோம். இதுவே, 21 ஆம் நூற்றாண்டில், அதிக உயிரிழப்பு நிகழ்ந்த   சம்பவங்களில், வழக்குகள் மற்றும் விசாரணைகளுக்கு ஒரு காரணமாக மாறியுள்ளது.

வாதங்களைப் பற்றிய நமது அணுகுமுறையும் இதுபோன்றதே.  சில மத போதகர்கள் எய்ட்ஸை ஓரின சேர்க்கையாளர்களுக்கு கடவுளின் தண்டனை என்று விவரிக்க விரைந்தாலும், நவீன சமூகம் கருணையுடன் அத்தகைய கருத்துக்களை புறம்தள்ளிவிட்டது, இந்த நாட்களில் எய்ட்ஸ், எபோலா மற்றும் பிற சமீபத்திய தொற்றுநோய்கள் பரவுவதை ஒருங்கிணைந்த செயல்படுவதில் உள்ள  தோல்விகள் என்று பொதுவாகக் கருதுகிறோம்.

இதுபோன்ற பிரச்சனைகளைத்  தடுப்பதற்குத் தேவையான அறிவும் கருவிகளும் மனிதகுலத்திடம் உள்ளன, ஒரு தொற்று நோய் கட்டுப்பாட்டை மீறிவிட்டால், அது தெய்வீக கோபத்தை விட மனித இயலாமையால் தான், என்று நாம்  கருதுகிறோம். கோவிட் -19 இந்த விதிக்கு விதிவிலக்கல்ல. நெருக்கடி வெகுவாக கடந்து போனாலும், பழி போடும்  விளையாட்டு ஏற்கனவே தொடங்கிவிட்டது. வெவ்வேறு நாடுகள் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுகின்றன. அரசியல்வாதிகள் தங்களுக்குள் உள்ள போட்டியில்  கையெறிகுண்டுகளை ஒருவர் மீது ஒருவர் வீசுகின்றனர்.

கொந்தளிப்பிலும், பெரிய அளவிலான நம்பிக்கையும் ஒருபக்கம் உள்ளது. உயிரைக் காப்பாற்றும் நம்  மருத்துவ ஹீரோக்கள் . இறந்தவர்களை அடக்கம் செய்து பேரழிவை மன்னிக்கும் பூசாரிகள் அல்ல.  ஆய்வகங்களில் உள்ள விஞ்ஞானிகள், நம் சூப்பர் ஹீரோக்கள்

ஸ்பைடர்மேன் மற்றும் வொண்டர் வுமன் இறுதியில் கெட்டவர்களை தோற்கடித்து உலகைக் காப்பாற்றுவார்கள் என்பது திரைப்பட ரசிகர்களுக்குத் தெரியும், எனவே சில மாதங்களுக்குள் அல்லது ஒரு வருடத்திற்குள், ஆய்வகங்களில் உள்ளவர்கள் கோவிட் -19 க்கு பயனுள்ள சிகிச்சை மற்றும் தடுப்பூசி கூட. கொண்டு வருவார்கள் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.

கொரோனா வைரசுக்கு, இந்த கிரகத்தில் ஆல்பா உயிரினம் என்றால் என்ன என்பதை காண்பிப்போம் !  வெள்ளை மாளிகையிலிருந்து, வால் ஸ்ட்ரீட் வரை மட்டுமல்ல  இத்தாலியின் பால்கனியிலும் அனைவரின் உதடுகளில் உள்ள கேள்வி: “தடுப்பூசி எப்போது தயாராகும்?”  இல்லை என்றால் ? என்பதுதான்.

தடுப்பூசி  தயாராகி, தொற்றுநோய் உண்மையில்  முடிவுக்கு வந்ததும், மனிதகுலம்  கற்றுக்கொண்ட பாடம்  என்னவாக இருக்கும்? மனித உயிர்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து சாத்தியக்கூறுகளிலும், நாம் இன்னும் அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

நமக்கு அதிகமான மருத்துவமனைகள், அதிகமான மருத்துவர்கள், அதிக செவிலியர்கள் இருக்க வேண்டும். நாம் அதிக சுவாச கருவிகள், அதிக பாதுகாப்பு கவசங்கள், அதிக சோதனை கருவிகளை கையிருப்பில் வைக்க வேண்டும்.

அறியப்படாத நோய்க்கிருமிகளை ஆராய்ச்சி செய்வதிலும், நவீன சிகிச்சைகளை வளர்ப்பதிலும் அதிக பணம் முதலீடு செய்ய வேண்டும். நாம் மீண்டும் இதுபோல் முடங்கிவிட கூடாது.

விஞ்ஞானிகள் பரிந்துரைத்ததால், கத்தோலிக்க திருச்சபை தனது விசுவாசிகளை தேவாலயங்களுக்கு வருவதிலிருந்து தவிர்க்க அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேல் அதன் ஜெப ஆலயங்களை மூடியுள்ளது. இஸ்லாமியர்கள் மசூதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும், கோயில்களில் பொது விழாக்களை நிறுத்தியும் இந்த புனித இடங்களை மூடி  வைத்துள்ளன.

மனித இனம் பின்னோக்கி இடைக்காலத்தை நோக்கி பயணிக்க விரும்பியதில்லை. விஞ்ஞானிகள் கூட நம் எதிர்பார்ப்புகளில் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதையும், வாழ்க்கையின் எல்லா பேரழிவுகளிலிருந்தும் நம்மைக் காப்பாற்ற டாக்டர்கள் மீது குருட்டு நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளக்கூடாது என்பதையும் ஒப்புக்கொள்வார்கள்.

ஒட்டுமொத்த மனிதநேயம் இன்னும் சக்திவாய்ந்ததாக மாறினாலும், தனிப்பட்ட மக்கள் இன்னும் தங்கள் பலவீனத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும். மனித வாழ்வை  காலவரையின்றி நீட்டிப்பது இப்போது இல்லையென்றாலும், இன்னும் ஓரிரு நூற்றாண்டுகளில் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கக்கூடும். எந்தஒரு மாற்றத்தையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மரணத்திற்குப் பின்னும் நிலைத்திருப்போம் என்று நம்புகிற மக்கள் மதத்தை ஒரு பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்துவது பல நூற்றாண்டுகளாக தொடர்கிறது.

இப்போது மக்கள்  விஞ்ஞானத்தை ஒரு மாற்று பாதுகாப்பு கேடயமாக சில சமயங்களில் பயன்படுத்துகிறார்கள், மருத்துவர்கள் அவர்களை எப்போதும்  காப்பாற்றுவார்கள் என்றும்  என்றென்றும் நாம் வாழ்வோம் என்றும் நம்புகிறார்கள்.

தொற்றுநோய்களைக் கையாள்வதற்கு அறிவியலை நாம் நம்ப வேண்டும், அதேசமயம்   இறப்பு மற்றும் மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். இதில், நமக்கு சமநிலையான அணுகுமுறை தேவைப்படுகிறது.

தற்போதைய நெருக்கடி உண்மையில் பல நபர்களுக்கு மனித வாழ்க்கையின் நிச்சயமற்ற  தன்மை மற்றும் மனித சாதனைகள் குறித்து மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடும். ஆயினும்கூட, ஒட்டுமொத்தமாக நமது நவீன நாகரிகம் பெரும்பாலும் எதிர் திசையிலேயே  செல்லும்.

தற்போதைய நெருக்கடி முடிவுக்கு வரும்போது, மனிதர்களுக்கு வாழ்வின் தத்துவங்களை போதிப்பதற்கு எந்த ஒரு செலவும் இருக்கப்போவதில்லை.  ஆனால் மருத்துவப் படிப்புகள் மற்றும் சுகாதார துறைக்கான நிதி ஒதுக்கீடுகள் பன்மடங்கு அதிகரிக்கும்.

மனிதநேயத்துடன் நாம் எதிர்பார்க்கக்கூடிய சிறந்த விஷயம் அதுவாகத்தான் இருக்கும்.

அரசாங்கங்கள் மதச்சார்பாக செயல்படுவது   ஏற்புடையதல்ல, அதற்கான களமும் நேரமும் இது அல்ல. உண்மையில், அரசாங்கங்கள் சிறந்த சுகாதார அமைப்புகளை உருவாக்குவதில்  கவனம் செலுத்த வேண்டும்.

நமது ஆயுட்காலம் என்பது மருத்துவர்களால் தீர்க்க முடியாத புதிராக இருக்கலாம், ஆனால் அதை அவர்கள் சிறுது காலம் நீட்டிக்க உதவலாம்.

அதில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தீர்மானிக்க போவது நாம் தான் எந்த ஒரு கோட்பாடும் அல்ல.