நாம் வசிக்கும் இடங்களில் நமக்கு தொல்லை கொடுத்து வரும்  எலி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி,மூட்டைப்பூச்சிகள் போன்ற பூச்சிகளை கொலை செய்யாமல், அவற்றை நம் பகுதிக்கு வர விடாமல் இயற்கை மூலம் விரட்டியடிக்கலாம்.

கண்டிப்பாக நாம் ஒவ்வொருவரும் இது போன்ற கொடிய மிருகங்களால் (பூச்சிகளாலும்) அதிக தொந்தரவுகளை சந்தித்திருப்போம்.

இவற்றின் தாக்குதலில் இருந்து நம்மை காப்பாற்ற, கடைகளில் விற்கும் விலை உயர்ந்த பொருட்களைப் பயன்படுத்தி நாமும் அந்த நச்சுக்களை சுவாசித்து நோயாளிகளாக மாறி வருகிறோம்.

இவற்றை தவிர்த்து, ஒரு சில இயற்கை பொருட்களைக் கொண்டே அவற்றை எளிதில் விரட்டலாம்..

அதற்கான எளிய வழிமுறைகள் இதோ உங்களுக்காக….

 

எலி : எலிக்கு புதினாவின் வாசனை பிடிக்காது.. எனவே, புதினாவை அது வரும் இடங்களில் கசக்கிப் போட்டாலோ அல்லது புதினா எண்ணையை பஞ்சில் நனைத்து எலி வரும் இடங்களில் வைத்தாலோ, அவை வருவதைத் தடுக்கலாம்..

பல்லி : உங்கள் வீட்டு சுவற்றை பல்லிகள் ஆக்கிரமித்துள்ளதா..? அப்படியெனில், வீட்டின் மூலைகளில் முட்டை ஓட்டினை வையுங்கள்.. அதன் நாற்றத்தினால், பல்லிகள் போய்விடும்..

ஈ : சில வீடுகளில் “ஈக்கள்” அதிகம் மொய்க்கும்.. அப்படி உங்கள் வீட்டில் “ஈக்கள்” அதிகம் இருந்தால், துளசி செடியை வீட்டு ஜன்னல்களில் வைத்து வளர்த்து வாருங்கள்..

இல்லாவிட்டால், லாவெண்டர், யூகலிப்டஸ் போன்ற எண்ணெய்களை தெளித்து விடுங்கள்..

கொசுக்கள் : கொசுக்கள் வராமல் இருக்க வேப்பிலையை பயன்படுத்தலாம்.. கொசு விரட்டிகளை விட வேப்பிலை மிகவும் சிறந்தது என்று ஆய்வுகளும் கூறுகின்றன..

எனவே, உங்கள் வீட்டில் கொசுக்கள் அதிகம் இருந்தால், காய்ந்த வேப்பிலையைக் கொண்டு தீ மூட்டுங்கள்.. அப்போது வரும் புகையினால் கொசுக்கள் அழிந்துவிடும்..

கரப்பான்_பூச்சி : கரப்பான் பூச்சியைக் கண்டு பயப்படுவோர் அதிகம்.. அப்படி பயமுறுத்தும் கரப்பான் பூச்சிகள் வரும் இடங்களில் மிளகுத் தூள், வெங்காய பேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சிறிது நீரில் கலந்து தெளித்தால், அவைகள் வருவதைத் தடுக்கலாம்..

மூட்டைப்பூச்சி: மூட்டைப்பூச்சி உங்கள் வீட்டின் மெத்தையில் அதிகம் இருந்தால், வெங்காய சாற்றினை தெளித்து விட்டால், அதன் வாசனையில் மூட்டைப்பூச்சிகள் அழிந்து விடும்.. பலரும் பயன்பெற பகிருங்கள் நண்பர்களே..

இயற்கை பூச்சி விரட்டி: விவசாயத்தில் பூச்சிகளை விரட்டும் மூலிகை பூச்சி விரட்டி ஒன்றை எப்படிதயாரிப்பது என்று பார்ப்போம். வேம்பு, ஊமத்தை, எருக்கு, புங்கன், நொச்சி ஆகியவற்றின் இலைகளை தலா 5 கிலோ வீதம் சேகரித்து, அவற்றை சிறு துண்டுகளாக வெட்டி, 10 லிட்டர் கோமியத்தில் 3 நாட்கள் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.

காற்றோட்டமான இடத்தில் நன்றாக கலக்கி நிழலில் மூடி வைக்க வேண்டும். மூன்று நாட்களுக்கு பிறகு நன்கு கலக்கி வடிகட்ட வேண்டும்.

இதில் ஒரு லிட்டர் எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளின் மீது தெளிக்க வேண்டும். வாரம் ஒருமுறை இதை செய்யலாம்.

இலைகள் நொதித்து அதில் இருந்து கிளம்பும் வேதிப்பொருள் மூலம் பூச்சிகள் விரட்டப்படும். அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.

முதலீடு தேவையில்லை. மண்ணில் நச்சுத்தன்மை தங்குவதில்லை. இதன்மூலம் இயற்கையாகவே பூச்சிகளை விரட்டலாம்,