சென்னை:
ண்டிகை காலம் என்பதால் குழந்தைகள் முதியவர்களை கடை வீதிகளுக்கு அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன சிடி ஸ்கேன் கருவியை அமைச்சர் துவக்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த அதிநவீன சிடி ஸ்கேன் கருவி மூலம் இருதய மற்றும் இருதய ரத்த நாளங்களை துல்லியமாக படம் எடுக்க முடியும் என தெரிவித்தார். சுகாதாரத்துறையில் பிற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் இருப்பதாக பிரதமர் பாராட்டியதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் பண்டிகை காலங்களில் குழந்தைகள் முதியவர்களை பொதுவெளிக்கு அழைத்து வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.