டெல்லி: N95 வகை மாஸ்க்குகளை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா பரவலில் இருந்து காத்துக் கொள்ள மக்கள் வித்தியாசமான மாஸ்குகளை பயன்படுத்தி வருகின்றனர். அதில் ஒரு வகை N 95 எனும் மாஸ்க். இதில் சுவாச வால்வு பொருத்தப்பட்டு இருக்கும்.
அதன் காரணமாக, இதை லட்சக்கணக்கான மக்கள் உபயோகித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை இந்த ரக மாஸ்க் தடுக்காது. எனவே, சுகாதார பணியாளர்கள் பயன்படுத்தும் N95 வகை மாஸ்க்குகளை தவிர்க்க வேண்டும்.
பொதுமக்கள் N 95 வகை மாஸ்க்குகளை  பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மூக்கின் துவாரங்களை மறைக்கும் விதமாக வீட்டிலேயே தயாரிக்கப்படும் துணி முக்கவசத்தை பயன்படுத்துவது நல்லது.
துளையுடன், சுவாச கருவிகள் கொண்ட N 95 மாஸ்க்குகளை சுகாதார பணியாளர்கள் தவிர்த்து மக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது.